Sunday, April 28, 2013

இப்படியும் நடக்கலாம்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகல்

 
மும்பை ஜனவரி 20,2018: இனி சர்வதேச போட்டிகளில் இந்திய  கிரிக்கெட் அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளால் IPL போட்டிகளிலிருந்து  வீரர்களின் கவனம் சிதறுகிறது. எனவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது என பிசிசிஐ தலைவர் லிலித் களவாணி நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

சந்திப்பின்போது உடனிருந்த  IPL ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜா கூறுகையில்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளால் யாருக்கும் எந்த எந்த ஒரு பயனும் இல்லை. பிசிசிஐ சரியான முடிவை எடுத்துள்ளது என்றார். இந்த அறிவிப்பால் வீரர்களும், ரசிகர்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். IPL போட்டிகளில் அவர்கள் முழு கவனம்  என்றும் அவர் மேலும் கூறினார். இந்த முறை ஜடேஜா மும்பை அணியால் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பிசிசிஐயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனி கடந்த ஆண்டு ஒய்வு அறிவித்த போதே தானும் ஒய்வு பெற இருந்ததாகவும் பதினாறு வயதில் தனக்குள் இருந்த கிரிக்கெட் ஆர்வம் சிறிதும் குறையாததால் ஒய்வு முடிவை கைவிட்டதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு IPL போட்டிகளின்போது எல்லை கோட்டை 50 மீட்டர்களுக்கு சுருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது . மேலும் 20 மீட்டர் வட்டத்துக்கு வெளியே எந்த நேரத்திலும் ஃபீல்டர் யாரும் நிற்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...