Sunday, May 27, 2018

எச்சரிக்கை..... எச்சரிக்கை ...

ச்சரிக்கை..... எச்சரிக்கை ...சமீப காலமாக தமிழர்களிடம்  “டுமிலண்டா” என்ற ஆபத்தான வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அந்த வைரசை பற்றிய விவரங்கள் கீழே

எங்கிருந்து பரவுகிறது:
மார்க்கெட் இழந்த சினிமா இயக்குனர்கள் இந்த வைரஸை பரப்புகிறார்கள். குறிப்பாக சீ..ன்,பார...ஜா,அ..ர்,கௌ..ன் ஆகியோர். இவர்கள் தவிர திரு...,வேல்...ன் ஆகியோரிடமிருந்தும் பரவுகிறது.

யாரை தாக்கும்:
இந்த வைரஸ் அனைவரையும் தாக்கும். இருந்தாலும்  அப்பாவி ஏழை மக்களையும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களையுமே  இந்த வைரஸ் எளிதில் தாக்கும்.

திடீரென இந்த வைரஸ் எப்படி தோன்றியது:
மத ரீதியான லாபத்திற்காக வெளிநாட்டில் இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

எப்படி பரவுகிறது:
பெரும்பாலும் மேலே குறிப்பிட்ட மார்க்கெட் இழந்த இயக்குனர்களின் பேச்சை கேட்பதாலும், அரை வேக்காட்டு மீம்ஸ்களை நம்புவதாலும் சில செய்தி சேனல்கள் மூலமும் இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது.

நோயின்  அறிகுறிகள்  என்ன?
நோய் தாக்கியவர்கள் அரசியல் பேசும்போதும்  அவர்களின்  கண்கள் சிவக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மன குழப்பம் ஏற்பட்டு அரசு தனி துறை ஒன்றை அமைத்து  தமிழர்களுக்கு எதிராக சதி செய்வதாக நம்புவார்கள். தமிழர்களின் வரலாற்றையே குழப்புவார்கள். இஷ்டத்துக்கு எதை  வேண்டுமானாலும் கூறி விட்டு   “டுமிலண்டா” என்று கூறி விட்டால் அவர்களை நம்ப வைத்து விடலாம்.

நோய் முற்றியவர்கள்  அவர்களுக்கு   எதிர் கருத்தை கூறினால் கடித்து வைத்து விடுவார்கள். அரிதாக சில நோயாளிகளுக்கு  ஆமை கறி சாப்பிட வேண்டும் என்றும் தோன்றும்.  

நோய் வந்த பின் என்ன செய்ய வேண்டும்:
ஆரம்ப நிலையில் இருப்பவர்களை உண்மையை எடுத்துக் கூறி சரி செய்யலாம். நோய் முற்றிய பின் ஒன்றும் செய்ய முடியாது.

தடுப்பு முறை:
அரசாங்கம் இதுவரை இந்த நோயை தடுக்க கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழர்கள் இப்போதைக்கு பொது அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம்  இந்த வைரஸ்  தாக்காமல் காத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...