Sunday, May 3, 2015

ஓகே கண்மணி – இயக்குனர்கள் மாறினால்

லிவிங் டுகெதர் என்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு படம் காட்டி விட்டார் மணிரத்னம். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் இளம் பெண்களும் தியேட்டர் நோக்கி படை எடுத்து    படத்தை வெற்றி பெற செய்து விட்டனர். எளிமையான ஒரு வரி கதையை மணிரத்னம் அவர் பாணியில் டெவலப் செய்து  படமாக்கி விட்டார். இதே ஒன் லைன் மற்ற இயக்குனர்கள் கையில் கிடைத்து இருந்தால் என்ன செய்து இருப்பார்கள் என்று யோசித்ததன் விளைவு கீழே.

பாலாவின் கதை:

உதவி இயக்குனர்: சார் நாம லிவிங் டுகெதர், அதாவது கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழறதை பத்தி படம் எடுக்குறோம் சார்.

பாலா: கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழணுமா? நல்ல ஒன் லைன். சரி நான் டெவலப்  பண்றேன். எழுதி வச்சுக்கோங்க. கதாநாயகன் போடி மலை மேல  கஞ்சா தோட்டத்துல வேலை பாக்குறான்.  கதாநாயகி போடி டவுன்ல பிச்சை எதுக்குறா

உ.இ: சூப்பர் சார்.

பாலா: கதாநாயகனை ஒரு நாள்  போலீஸ் பிடிச்சுகிட்டு போயிடுது. ஸ்டேஷன்ல வச்சு அடிச்சு தெருல தூக்கி போடுறாங்க. மயக்கத்துல இருக்குற அவரை தெரு நாய்ங்க எல்லாம் சேர்ந்து  அவரை கடிக்க வருதுங்க. அங்க பிச்சை எடுத்துகிட்டு இருக்குற நாயகி அவரை காப்பாத்தி அவளோட வீட்டுக்கு கொண்டு போறா. நாயகனுக்கு மயக்கம் தெளிஞ்சதும் கதாநாயகி மங்கலா தெரியுறா. ராஜா சார் பாட்டு வைக்கிறோம் இந்த இடத்துல

உ.இ: பின்னுறீங்க சார். இந்த இடத்துலேயே ரசிகர்கள் எல்லாம் கரைஞ்சு போய்டுவாங்க

பாலா:கதாநாயகிக்கு கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை அப்படிங்குறா. இந்த இடத்துல ஒரு பிளாஷ்பேக் போடுறோம். அவளோட சின்ன வயசுல கதாநாயகி  அப்பா அம்மாவுக்கு சண்டை வந்து  ரெண்டு பெரும் மாத்தி மாத்தி தலைல கல்லை தூக்கி போட்டு செத்து போய்டுறாங்க. இவ பிச்சைக்காரி  ஆயிடுறா. கதாநாயகனுக்கு கல்யாணம் அப்படின்னா என்னன்னே தெரியாது. ஏன்னா அவன் கஞ்சா தோட்டத்துலயே வளர்ந்தவன் சின்ன வயசுல இருந்து. அதனால கல்யாணம் பண்ணாம வாழறாங்க ரெண்டு பேரும்

உ.இ: இனிமே அவங்க எப்படி கல்யாணம் செஞ்சுக்க போறாங்கனு கதையை கொண்டு போய்டலாமா  சார்.

பாலா: என்ன பேசுற. அப்படி எல்லாம் படம் எடுத்தா படம் எப்படி ஓடும்.

உ.இ: கோவிச்சுக்காதீங்க சார்.  நீங்களே சொல்லுங்க.

பாலா: இப்போ இவங்க சேர்ந்து இருக்கிறது பிடிக்காம  பிச்சைக்கார கூட்ட தலைவனும், கஞ்சா கூட்ட தலைவனும் இவங்களுக்கு பல வகைல தொல்லை தராங்க. ஒரு நாள் கதாநாயகியை அடிச்சு அவளை மயக்கம் போட வச்சுடுறாங்க. கதாநாயகன் கோபத்துல ரெண்டு வில்லன்களையும் கொன்னு போட்டுடுறான்

உ.இ: இப்போ ரெண்டு பெரும் சேர்ந்து சந்தோசமா வாழறாங்களா?

பாலா: அதான் இல்லை. மயக்கம் போட்ட கதாநாயகி மயக்கம் தெளிஞ்சு அவளை கொன்னுட சொல்றா.

உ.இ: எதுக்கு சார்?

பாலா: இப்படி எல்லாம் கேக்க கூடாது. சொல்றா அவ்வளவுதான். உடனே கதாநாயகனும் அவ குரல்வலையை கடிச்சு துப்பிடுறான். ராஜா சார் பேக் ரவுண்டுல பாட்டு பாட படம் முடியுது.  

உ.இ: படம் ஹிட்டு சார். இந்த போட்டோ பாருங்க. இவர்தான் துல்கர் சல்மான். இவரை இந்த படத்துல நடிக்க வைப்போமா சார்.

பாலா: நிச்சயமா. அவர் கிட்ட சொல்லிடு. இன்னைல இருந்து படம் முடியுற வரை குளிக்க கூடாது. பல்லு விலக்க கூடாது. ரொம்ப சிவப்பா இருக்காரு ஆளு. கொஞ்சம் கரிய வாங்கி மேல பூசிக்க சொல்லு. மொட்டை அடிச்சு விட்டுடு. கதாநாயகி யாரு போடலாம்.

உ.இ: போட்டோ பாருங்க சார். இவங்க நித்யா மேனன்.

பாலா: என்ன இந்த அம்மா குண்டா இருக்கு. படம் முடியிற வரைக்கும்  அவங்க தண்ணி மட்டும்தான் குடிக்கணும். சொல்லிடு

உ.இ: நிச்சயம் சார்!

கெளதம் மேனன் ஸ்டைல்:

கெளதம்: ஆக்சுவல்லி திஸ் இஸ் பெண்டாஸ்டிக் லைன். கதை சொல்றேன் கேட்டுகோங்க. ஹீரோ ஒரு போலீஸ் ஆபீஸர். அவர் ஒரு பொண்ணோட லிவிங் டுகெதர்ல இருக்கார். ரௌடிஸ் அந்த  பொண்ணை  கொன்னுடுறாங்க. ஹீரோவுக்கு கால்ல அடி. ஹீரோயின் ITல வொர்க் பண்ற முப்பது வயசு லேடி. அவரோட லிவிங் டுகெதர்ல இருக்குற  பையன்  ரௌடிசுக்கும் போலீசுக்கும் நடக்குற சண்டைல நடுவுல சிக்கி கொல்லப்படுறார். அந்த நேரத்துல ஹீரோயின் கர்ப்பமா வேற இருக்காங்க. அடிபட்ட ஹீரோவும், கர்ப்பிணி ஹீரோயினும் ஹாஸ்பிடல்ல மீட் பண்றாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்க கல்யாணம் செஞ்சுக்காமலே கணவன் மனைவியா  சேர்ந்து வாழறாங்க.

உ.இ: (கண்ணை கட்டுதே) சூப்பர் சார். தமிழ் சினிமாவுக்கே புதுசு இது.

கெளதம்: இப்போ என்ன ஆகுதுன்னா அவங்க சேர்ந்து வாழ்ந்து நெறைய இங்கிலீஷ்  வசனம் பேசி கடைசில  கல்யாணம் செஞ்சுக்க  முடிவு பண்றாங்க.  அப்போ பார்த்து ரௌடிஸ் திரும்ப வந்து அந்த பொண்ணை கடத்திட்டு போய் ECR ரோட்ல ஒளிச்சு வச்சுடுறாங்க.

உ.இ: அதுக்கு மேல என்ன சார். ஒரு சண்டை. ஹீரோ அந்த பொண்ணை தேடி கண்டு பிடிச்சுடுறார். ஆனா உயிரோடவா? இல்ல உயிர் இல்லாமலா?

கெளதம்: ரெண்டு கிளைமாக்ஸ் வச்சுடுறோம். ஒன்னுல அந்த பொண்ணு உயிரோட வருது. இன்னொன்னுல  செத்து போயிடுது.


உ.இ: நல்ல கதை சார். பேர் என்ன சார்?

கெளதம்: கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

பதிவு முழுக்க முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. எதிர்ப்பு வரும் பட்சத்தில் உடனே நீக்கப்படும்.

2 comments:

  1. Double o.k. Enjoyed reading your post.

    ReplyDelete
  2. வணக்கம்
    வித்தியாசமான கற்பனை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...