Saturday, April 6, 2013

நாளைய நாயகர்கள் (அல்லது) எதிர்கால தமிழ் சினிமா

கடந்த பதிவான "தமிழ் சினிமாவில் தளபதிகள்" பதிவுக்கு செம ரெஸ்பான்ஸ். பதிவை படித்த சில விஜய் ரசிகர்கள் "நீயெல்லாம் ஏன் எழுத வர்ற" என்று தங்கள் கருத்தை வேறு  விட்டுவிட்டு சென்று இருந்தனர். அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய இதோ இன்னொரு பதிவு.

மிழ் ரசிகர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்த ரசிகர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதான். தனக்கு பிடித்த நடிகரை கடவுள் போல வைத்து கொண்டாடுவார்கள். ஆந்திராகாரர்களும் இது போலதான் எனினும், தமிழ் ரசிகர்கள்  மட்டுமே யாரையும், எதையும் கொண்டாடுவார்கள். இவர்களால் ரஜினியையும் ரசிக்க முடியும்;ராமராஜனையும் ரசிக்க முடியும்;ராஜ்கிரணையும் ரசிக்க முடியும்; எல்லாவற்றுக்கும் மேலாக விஜயையும் ரசிக்க முடியும்.

இப்படிப்பட்ட ரசிகர்களை எதிர்காலத்தில் மகிழ்விக்க இருக்கும் நாயகர்கள் யார்?யார்?  இதோ ஒரு அலசல்.

பவர் ஸ்டார்: 

இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில்  இவரை தெரியாதவர் இருக்க முடியாது. லத்திகா, லட்டு என இரண்டு மெகா ஹிட்கள். காமெடி, ரொமான்ஸ் ,ஆக்சன், டான்ஸ், செண்டிமெண்ட் என எல்லாவகையான நடிப்பையும் ரசிகர்களுக்கு பரிமாறி அவர்களுக்கு  புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தருபவர். எல்லா வகையான நடிப்பையும்  வெளி காட்டும் திறமையே இவரின் பலம். 


இவரின் "ஆனந்த தொல்லை"யை தமிழகமே எதிர்பார்த்து உள்ளது. இந்த படம் 10,000 நாட்கள் ஓடி சாதனை படைக்கவும் வாய்ப்பு உள்ளது.  குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஏற்கனவே கவர்ந்துவிட்ட பவர் ஸ்டார் எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி.

ராஜகுமாரன்  

 தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களை போலவே, ரொமாண்டிக் ஹீரோக்களுக்கும் ஒரு இடம் உண்டு. ஆனால் சில காலமாக இந்த இடம் யாராலும் நிரப்பபடாமல் காலியாகவே உள்ளது. எதிர் காலத்தில் அந்த இடத்தை நிரப்பி இளம் கல்லூரி பெண்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமரப்போவரே இந்த ராஜகுமாரன்.


இவர் நடித்த படம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை எனினும், வெளிவந்த சில போட்டோக்களிலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார். யோசித்து பாருங்கள். தேவயானியுடன் இவ்வளவு ரொமான்ஸ் செய்பவர் அமலா பால் கிடைத்தால் எவ்வளவு ரொமான்ஸ் செய்வார் என்று. ஆனால் இவருடன்  நடிக்க போகும் நடிகைகளுக்கு இவரை பார்த்து காதல் வருகிறதோ இல்லையோ, நிச்சயம் பேதி  வரும் . ராமராஜன், பாக்கியராஜ் கலந்த கலவையாக காணப்படும் இவர் நாளைய நம்பிக்கை  நட்சத்திரம்.

ஷண்முக பாண்டியன் 

"புலிக்கு பிறந்தது பூனையாகுமா?" ஆகாது என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது பாருங்கள்(படத்தை ரொம்ப நேரம் பார்க்காதீர்கள். மீறி பார்த்து காய்ச்சல் வந்தால் நான் பொறுப்பல்ல)


கண்களில் எரியும் அந்த  நெருப்பு இவனெல்லாம் நல்ல வருவாண்டா என்று சொல்கிறது. நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நுழைய நல்ல நேரம் பார்த்து வருகிறார் இவர். ஆனால் ரசிகர்களின் நேரம் நல்ல நேரமாக இருப்பதால் தப்பித்து வருகின்றனர். எனினும்  இன்னொரு தளபதியாக இவர் மாறி ரசிகர்களை மிரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவருக்கும் பவர் ஸ்டாருக்கும் எதிர்காலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பிற்காலத்தில் சண்முக பாண்டியனின் தம்பி பிரபாகரனும் நடிக்க வரும்போது போட்டி மிக கடுமை ஆகும் . பார்க்கலாம் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...