Tuesday, June 18, 2013

தீர்ப்பு, குஷ்பூ, கற்பு

சென்னை உயர்நீதி மன்றம் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆணும், பெண்ணும் திருமணத்துக்கு முன்னரே உடல் ரீதியிலான உறவு வைத்து கொண்டால் அவர்கள் கணவன்-மனைவியாகவே கருதப்படுவர் என்பதே அந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை கேட்டதும் சுறுசுறுப்பான குஷ்பூ "நான்தான் அப்பவே சொன்னேன்ல. நீங்கதான் கேக்கல" என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட தனது கருத்தை நீதிமன்றம் ஏற்று கொண்டதை போல அகமகிழ்ந்து உள்ளார்.

உண்மையில் இந்த தீர்ப்பு பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தீர்ப்பு குஷ்பூவின் கருத்தை எந்த வகையில் ஆமோதிக்கிறது என புரியவில்லை. கணவன்-மனைவி மட்டுமே உடல் ரீதியிலான உறவு கொள்ள வேண்டும் என்பதே நம் கலாசாரம். இப்போது நீதிமன்றம் சொல்லி இருப்பது உடல் ரீதியிலான உறவு கொண்டவர்கள் அவர்கள் முறைப்படி திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் கணவன்-மனைவியே என்று. 

இந்த தீர்ப்பின்படி திருமணத்தின் முன்னரே உறவு கொள்பவர்கள் அந்த கணத்திலிருந்து கணவன்-மனைவி ஆகிவிடுவர். கணவன்-மனைவி மட்டுமே உறவு வைத்து கொள்ள வேண்டும் அல்லது உறவு கொண்டால் அவர்கள் கணவன்-மனைவி என்று இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகிறது. ஆக  கலாச்சார ரீதியில் நாம் ஏற்று கொண்டதை இப்போது நீதிமன்றம் சட்ட ரீதியிலும் அங்கீகரித்துள்ளது. தீர்ப்பின்படி லிவிங்க் டுகெதர் முறையில் வாழ்பவர்கள் கூட இனி குஷ்பூவின் கருத்துக்கு மாறாக கணவன்-மனைவியாகவே கருதப்படுவர். இதில்  குஷ்பூ மகிழ்ச்சி அடைய என்ன  உள்ளது? அவருக்கே வெளிச்சம்


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...