Wednesday, March 26, 2014

யாருக்குதாங்க வோட்டு போடுறது?

“சார்! எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்”

“சொல்லுங்க”

“வரப் போற தேர்தல்ல  எங்க குடும்பம் யாருக்கு ஒட்டு போடணும்னு நீங்கதான் சொல்லணும்”

“அது ஏன் நான் சொல்லணும்? எனக்கு என்ன தெரியும்”

“என்ன சார்? ப்ளாக் எல்லாம் எழுதுறீங்க. உங்களுக்கு தெரியாதது வேற யாருக்கு தெரியும்”

“யோவ்! அந்த ப்ளாக்ல எழுதுறதை நானே படிக்கிறது இல்ல. அவ்வளவு மட்டமா எழுதிகிட்டு இருக்கேன்”

“ரொம்ப தன்னடக்கமா பேசுறீங்க சார். ஆனா தயவு செஞ்சு இந்த உதவியை எனக்கு செய்ங்க. தப்பா யாருக்கும் போடக் கூடாதுன்னுதான் உங்ககிட்ட கேக்குறேன்.”

“சரி! நீ முதல்ல யாருக்கு போடலாம்னு யோசனைல இருக்க சொல்லு”

“காங்கிரஸ்”

“ஏன்யா! பத்து வருஷம் பட்டும் உனக்கு புத்தி வரலியா?”

“அப்போ பிஜேபி போட்டுடவா? மோடி பெரிய தலைவர்னு சொல்றாங்க”

“அது மட்டுமா சொல்றாங்க. அதெல்லாம் மீடியா கிளப்பி விடுறதுன்னும் சொல்றாங்க. அது மட்டும் இல்ல. அவர் வந்தா ஹிந்தியை திணிப்பார்னு வேற சொல்றாங்க. சொல்லு இந்த வயசுக்கு மேல ஹிந்தி கத்துப்பியா?”

“மாட்டேன் மாட்டேன். ஆனா அது எப்பிடிங்க ஹிந்தியை திணிக்க முடியும்?”

“ரொம்ப பேசாத. மத்தவங்க சொல்றதை நான் உனக்கு சொல்றேன். சரி உங்க குடும்பம் யாருக்கு ஓட்டு போட போறாங்க?”

“எங்க பெரிய அத்தை அரவிந்த் கேசரிவால்னு யாருக்கோ ஓட்டு போடப்போகுதாம்”

“அது அரவிந்த் கெஜ்ரிவால்யா”

“அது வட மொழில. தமிழ்ல கேசரின்னுதான் சொல்லணும்”

“எப்படியோ சொல்லி தொலை”

“அவருக்கு போடலாமா?”

“ஏன்யா! அவரே  எதுக்கெடுத்தாலும் போராடுவாரு. நாளைக்கு பிரதமர் ஆனதுக்கு அப்புறம் சர்வதேச மாநாடு எங்கயும் போயிட்டு அங்க சாப்பாடு சரி இல்லன்னு வெளிய வந்து போராட ஆரம்பிச்சா நம்ம நாட்டுக்கு எப்படிபட்ட அவமானம்? அந்த அவமானத்துக்கு உங்க பெரிய அத்தை காரணம் ஆகணுமா?”

“அதுவும் சரிதானுங்க. அப்போ கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு போட சொல்லிடவா?”

“எதுக்கு? இந்தியா சீனா ஆகவா? நாளைக்கே அவங்க பேஸ்புக், ப்ளாக் எல்லாம் தடை செஞ்சுட்டா நான் எழுதறதை எல்லாம் எங்க போய் படிப்ப? நான் எழுதலன்னா நாட்டுக்கு எத்தனை பெரிய பேரிழப்பு.”

“வாஸ்தவம்தானுங்க. அப்போ திமுகதான்”

“திருந்தவே மாட்டீங்களா?”

“அப்போ ஆதிமுகவுக்கு வோட்டு போடவா? முதல்வரை பிரதமர் ஆக்கிடலாம்”

“ஆக்கலாம்தான் . ஆனா காஷ்மீர் பிரச்சனைக்கு யாரு காரணம், பொருளாதார சரிவுக்கு யாரு காரணம்னு வரலாறு பாடம் நடத்தியே அஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க. நீ அவங்க செய்வாங்களா? எதுவும் நல்லது செய்வாங்களான்னு யோசிச்சுகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் ”

“சரி அப்போ கூட்டணி எல்லாம் பாக்காம  வைகோவுக்கு ஓட்டு போட வேண்டியதுதான். நல்ல மனுஷன்.”

நல்ல மனுஷன்தான். ஆனா அவர் தேர்தல் அறிக்கையிலேயே இந்த குழப்பு குழப்பி இருக்காரே? அவர் மேல நம்பிக்கையே போச்சு.”

“அப்போ மனசை திடப்படுத்திகிட்டு எங்க சின்ன அத்தையை விஜயகாந்த் கட்சிக்கு குத்திட சொல்லிடவா.”

“சொல்லு. ஆனா அவங்க கட்சிக்காரங்க ஒருவேளை மந்திரி ஆனதுக்கப்புறம் அவங்க பேசுறது பிடிக்காம கேப்டன் அவங்க மூஞ்சில குத்திடாம. அத்தனை பெரிய பதவில இருக்குறவங்களுக்கு அவமானம்.”

“அப்போ யாருக்குதாங்க ஓட்டு போடுறது? பேசாம நோட்டா அப்பிடின்னு சொல்றாங்களே. அதுக்கு போட்டுடவா?”

“நீயும் நானும் மட்டும் அதுக்கு போட்டு என்ன ஆக போகுது.”

“அப்போ எதுக்குதான் போடுறது?”

“அது தெரியாமதான இத்தனை நேரம் உன் கூட மொக்கை போட்டேன், இதை படிக்கறாங்களே அவங்களை வேணும்னா கேளு. சொல்வாங்க”

“அவருக்குதான் தெரியல. ஏங்க படிக்கிறவங்களே நீங்களாச்சும் சொல்லுங்க. யாருக்குதாங்க வோட்டு  போடுறது?” 


1 comment:

  1. // வரலாறு பாடம் நடத்தியே அஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க... // இது சூப்பரு...!

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே...!
    என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...!

    கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது...
    காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...