Thursday, May 30, 2013

ரஜினி-கமல் இணைந்தால் படத்தின் கதை எப்படி இருக்கும்?

"ரஜினி! நாம சேந்து படம் பண்ணனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க. அதுக்காக நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சுட்டேன். நாம சேந்து படம் செய்யலாம்"

"டெபனட்லி கமல்! நீங்க கதைய சொல்லுங்க. நாம பண்ணலாம்."

"ரஜினி! இந்த படத்துல நான் ஒரு புதுமைய கொண்டு வரேன். இந்த படத்தை நாம வெப்கேம்ல எடுக்குறோம். படம் எடுக்க எடுக்க லைவா இண்டர்நெட்ல போட்டு காமிக்கிறோம். இதுக்காக நான் இந்தியால எல்லா இன்டர்நெட்  சர்வீஸ்  ப்ரொவைடர்ஸ் கிட்டவும் பேசிட்டேன். "

ரஜினியின் மைண்ட் வாய்ஸ், "அரே பாபாஜி! என்னை என் நண்பர்களிடம் இருந்து காப்பாற்று."

"சூப்பர் கமல்! சூப்பர்! உங்களால மட்டும்தான் இது மாதிரி யோசிக்க முடியும். யூ ஆர் அ ஜீனியஸ். பாலச்சந்தர் சார் 1978ல உங்களை பத்தி சொன்னது சரிதான். பட் கமல் படத்தோட கதை என்ன?"

"நம்ம கதைப்படி  ஒரு பணக்கார  துபாய் ஷேக்."

"வெல்! நமக்கு ஷேக் வேஷமெல்லாம் நல்லா சூட் ஆகும்"

 
"அப்கோர்ஸ் ரஜினி. உங்க முகத்துக்கு அந்த ரோல் பொருந்தும். இப்போ கதைக்கு வரலாம். அந்த ஷேக் பெரிய பணக்காரர். நெறைய எண்ணெய் கிணறு அவர் பேருல இருக்கு. அந்த ஷேக்குக்கு ஒரு நாள் போன் வருது."

"வெயிட்! வெயிட்!  இன்ட்ரோ சாங் இருக்குல"

"நிச்சயம் இருக்கு. அந்த ஷேக்குக்கு  போன் பண்ணது அமெரிக்க அதிபர். தன் பொண்ணை அல்-கொய்தா தீவிரவாதிங்க  கடத்தி ஷேக்கோட  ஊருல வச்சு இருக்குறதா சொல்றார். இதை ஏன்  ஷேக்கிட்ட சொல்றாருன்னு கேக்குறீங்களா? ஷேக் முன்னாள் FBI ஏஜெண்ட். அவரு காதலிய தீவிரவாதிங்க கொன்னதால துபாய் வந்து ஷேக்கா மாறிட்டார்."

"சோ நீங்க தசாவதாரம் படத்துல புஷ் வேஷம் போட்ட மாதிரி இப்போ ஒபாமா வேஷம் போடுறீங்க. குட்"

"ஆமா ரஜினி! என்னை தவிர யாருக்கு அந்த ரோல் சூட் ஆகும். அப்புறம் அந்த அதிபர்  பொண்ணு ரோல்ல ஏஞ்சலினா ஜோலி நடிக்கிறாங்க "

"வெரி குட்!ரொம்ப நல்லா இருக்கு  . பட் கமல், கதைல ஒரு சின்ன மாற்றம்  செய்ய முடியுமான்னு பாருங்க."

" சொல்லுங்க ரஜினி. பகுத்தறிவாளர்கள் யாரு என்ன சொன்னாலும் ஆராய்ந்து முடிவு எடுப்பாங்க. சொல்லுங்க "

"அந்த ஷேக்கை அல்-கொய்தா தீவிரவாதிங்க ஏமாத்தி அவர் சொத்தை எல்லாம் பிடுங்கிட்டு நடு தெருல விட்டுடுறாங்க. அப்புறம் அந்த ஷேக் அவங்ககிட்ட சவால் விட்டுட்டு உழைச்சு புதுசா நாலு எண்ணெய் கிணறு வாங்குறாரு. அதுனால ஏற்கனவே அவருக்கும் தீவிரவாதிங்களுக்கும் பகை."

கமலின் மைண்ட் வாய்ஸ், "நம்மளை ஹாலிவுட் தரத்துல படம் எடுக்க விட மாட்டார் போலயே "

"இதை  K.S. ரவிகுமார் கிட்ட சொல்லி கதைல கொண்டு வர முடியுமான்னு பாக்குறேன். இப்போ கதை. இந்த விஷயத்த கேள்விபட்ட ஷேக் அதிபர் மகளை தேடி கிளம்புறாரு. இது தெரிஞ்ச தீவிரவாதிகள் பாகிஸ்தான்ல இருந்து நியுக்லியர் பாம் வாங்கிட்டு வந்து அந்த ஊரு முழுசும் வச்சுடுறாங்க. இப்போ அந்த ஷேக் அந்த பாமை எல்லாம் எடுத்துட்டு அந்த ஊரையும் அந்த பொண்ணையும் காப்பாத்துறதுதான் கதை. கிளைமாக்ஸ்ல ஷேக்குக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு விழா நடத்துறாரு. அவரு கையாலேயே ஆஸ்கார் அவார்ட் குடுக்குறாரு . ஷேக்குக்கு  ஜோலி லிப் டு லிப் கிஸ் குடுக்குறாங்க. இந்த கிஸ்ஸிங் ஸீன் மட்டும் 5 நிமிசம் வருது. இதை உலக தரத்துல எடுக்குறோம்"

"கமல்! இந்த கிஸ்ஸிங் சீன் எல்லாம் என்னால செய்ய முடியாது"

"நீங்க ஏன் செய்யணும் ரஜினி. நான்தானே படத்தோட ஹீரோ. நான்தான் செய்யணும்."

"அப்போ ஷேக் ரோல்ல நீங்க நடிக்கிறீங்களா? என்கிட்ட உங்க முகம்தான் ஷேக் ரோலுக்கு நல்லா வருமுன்னு சொன்னீங்க?"

"ஆமா. அதனாலதான் நான் உங்களை  மாதிரி வேஷம் போட்டு இந்த படத்துல நடிக்க போறேன். இதுக்காக நான் ஹாலிவுட் மேக்-அப் மேன் மைக்கேல் வெஸ்ட்மோர் கிட்ட பேசியாச்சு. அப்படியே என்னை உங்களை மாதிரியே மாத்திடுவார். இது கூடவே ஒபாமா வேஷமும் "

"அப்போ எனக்கு இந்த படத்துல வில்லன் ரோலா?"

"நோ நோ. உங்களை அப்பிடி விடுவேனா?"

"அப்போ எனக்கு என்னதான் ரோல்?"

"கிளைமாக்ஸ்ல பாராட்டு விழால என்னை பாராட்டி 5 நிமிஷம் பேசுறீங்க. அதுக்கு வசனம் எல்லாம் நீங்களே எழுதிக்கலாம்.  உங்களுக்கு அது நல்லா வருமே. ரஜினி! நில்லுங்க  எங்க போறீங்க."
 
"இமயமலைக்கு."


2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...