Monday, July 7, 2014

சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல் - இதையெல்லாம் கண்டுக்காம விட்டுடுங்க பாஸ்

து என்ன மாயமோ தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் பட்டம் மேல் அனைவருக்கும் அத்தனை மோகம். இரண்டு படம் ஓடினால் சூப்பர் ஸ்டார் ஆசை வந்து விடுகிறது. மூன்றாவது படமும் ஓடி விட்டால்  முதல்வர் ஆசை. ரஜினி அப்படிப்பட்ட ஒரு பாதையை வகுத்து வைத்து இருக்கிறார். அந்த பாதையிலேயே சென்றால் அவரின் இடத்தை அடைந்து விடலாம் என்பது இந்த தலைமுறை நடிகர்களின் கருத்து.

ரஜினி நடிப்பது போன்ற கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தால் போதும். எளிதாக வெற்றி பெறலாம் என்ற எண்ணமே தவறு. சற்று கவனித்தால்  ரஜினி தேர்ந்தெடுத்த வழி தனி வழி. புரட்சி தலைவர் போல அவர் மது அருந்தாமல் நடிக்கவில்லை. புகை பிடிக்காமல் நடிக்கவில்லை. கதாநாயகர்கள் புனிதர்களாக இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை தகர்த்து எறிந்தார். அவரை தமிழர்களுக்கு அவரை பிடித்து போக காரணம் அவரின் சுறுசுறுப்பும், நடிப்பில் காட்டிய மேனரிசங்களும். ஹீரோவேன்றால் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தான் நிற்க வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதாக அவரின் ஒவ்வொரு அசைவும் இருந்தது. அது அவருக்கு இயல்பாகவே அமைந்த விஷயம் என்பதால் அது மிகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது .

ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத கதையில் ரஜினி நடித்தாலும் அவர் அந்த கதையில் தன்னுடைய ஸ்டைலை புகுத்தி அதை இருபத்தி ஐந்து நாட்கள் ஓடக்கூடிய படமாக்குவார். இருபத்தி ஐந்து நாட்கள் ஓடக்கூடிய படம் ரஜினி இருந்தால் ஐம்பது நாட்கள் ஓடும். ஐம்பது நாட்கள் ஓட தகுதியான கதை படம் நூறு நாள் படமாகும். ரஜினியின் ரசிகர் பலத்தை அடிப்படையாக கொண்டு இதை கூறவில்லை. தன்னுடைய பங்களிப்பினால் எத்தகைய கதைக்கும் ரஜினி மதிப்பை கூட்டுவார் என்றே சொல்ல முயல்கிறேன்.

இந்த ஸ்டைலும், சுறுசுறுப்பும் ரஜினிக்கு இயல்பாகவே அமைந்த வரம். இத்தனை வருடம் அசைக்க முடியாத சூப்பர்ஸ்டாராக திகழ இதுவே காரணம். அவரை போல கதைகளில் நடித்தாலோ, அவரை போல அடுத்தடுத்து ஹிட் கொடுத்தாலோ யாராலும் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது. அப்படிப்பட்ட முயற்சி எடுப்பவர்கள் இன்னும்  சற்று சிரமப்பட்டால் நல்ல மிமிக்ரி கலைஞர்களாக வேண்டுமானால் வரலாம்.

இது எல்லாம் தெரிந்து இருந்தும் ரஜினி ரசிகர்கள் ஏன் சூப்பர் ஸ்டார் விவகாரத்தை பெரிதுபடுத்தினார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் இப்படி பட்டம் கொடுப்பது இது முதல் முறையில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சியும் இதே போன்ற ஒரு பட்டத்தை இதே நடிகருக்கு வழங்கியது. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் இதே போன்ற கருத்து கணிப்பு நடத்தி அடுத்த  சூப்பர் ஸ்டார் என்று ஆராய்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் எப்போதும் அவர்களால் உண்மையான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கண்டுபிடிக்க முடியாது. அதனால் இதையெல்லாம் கண்டுக்காம  விட்டுடுங்க பாஸ்  .


ந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ரஜினியின் உடல்நிலை பாதிப்படைய எந்திரனும் ஒரு காரணமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அந்த படத்துக்காக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா? ஒரு பெட்டிக்குள் மணிக்கணக்கில் உடலை அசைக்காமல் படுத்து இருந்து, முகத்தில் எது எதையோ தடவி எத்தனை சிரமங்கள். படப்பிடிப்பு நடந்தபோது வைரமுத்துவிடம் உடம்பெல்லாம் வலிக்கிறது என்று கூறினாராம். இத்தனை கஷ்டப்பட்டும் அந்த படத்துக்காக ரஜினிக்கு பெரிய அளவில் விருதுகளுள் எதுவும் கிடைக்கவில்லை. தவிர எந்திரனுக்கு எடுத்த கால அவகாசத்தில் உழைப்பில் இன்னும் இரண்டு படங்களில் ரஜினி நடித்து இருக்கலாம். கடைசியில் இரண்டாம் பாகத்தில் ரஜினியில்லை என்ற செய்தி ஒரு வகையில் சந்தோசமே.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...