Saturday, March 16, 2013

மதமாற்றம் தேசிய அபாயமா ?

 தன் மதத்தின் மேல் உண்மையான நம்பிக்கை கொண்ட எவனும் தன் மதத்தை விட்டு கொடுக்க மாட்டான். தனது  மதம் அழிந்து போகுமோ என்ற பயத்தில் அதை மற்றவர் மீது திணிக்கவும் மாட்டான்



உலகின் மிக பெரிய மல்டி-லெவல் மார்கெடிங் நிறுவனம் எது? ஆம்வே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம்வேவை விட பெரிய பழமையான ஒரு   அமைப்பு உள்ளது. அதுதான் கிருஸ்தவ மதம். நான் உன்னை மதம் மாற்றுவேன், நீ இரண்டு பேரை மதம் மாற்று. இறுதியில் உலகம் முழுதும் நாம் மட்டுமே இருப்போம் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் பரவி செழித்து இருக்கிறது.  

ஆனால் இந்தியாவை  பொறுத்தவரை பல ஆண்டுகளாய் முயன்றும் கிருஸ்தத்தால் பெரிய வெற்றி ஏதும் பெற இயலவில்லை. கடலோர மக்களை மதம் மாற்றிய அளவு மற்ற மக்களை மதம் மாற்ற அவர்களால் இயலவில்லை. வெளியே இருந்து வரும் ஆன்மிக கருத்துகளை விட பல மடங்கு ஆழ்ந்த கருத்துகளை இந்தியா தன்னிடத்தே கொண்டிருப்பதும் இதற்கு காரணம். இருந்த போதும் மத மாற்ற முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த முயற்சிகளில் கையாளப்படும் முறைகளில் சில கீழே.

முறை 1:
 
ஆரம்ப காலத்தில் ஆன்மிக கருத்துகளை பரப்பி வந்தவர்கள். பின் ஆன்மிக கருத்துகளை கொண்டு மக்களை கவர முடியாது என உணர்ந்தனர். அப்போது அவர்கள் எடுத்த ஆயுதம் ஜாதி. இந்து மதத்தில் ஜாதியம் இருப்பதாக கூறியும் அதில் இருந்து விடுபட  வேண்டுமானால் கிருஸ்துவமே வழி என்று கூறியும் மக்களை ஈர்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. மதம் மாறியவர்கள் ஜாதியை விட தயாராக இல்லை. கிருஸ்தவ நாடார், கிருஸ்தவ முதலியார், கிருஸ்தவ செட்டியார் என்று ஜாதியை கிருஸ்தத்தோடு சேர்த்தனர். மதத்தை விட்டாலும் மக்கள் ஜாதியை விட மாட்டார்கள் என்று அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது.

 முறை 2:

மதம் மாற்றுபவர்களின் மற்றொரு ஆயுதம்  "நிம்மதி ". மனிதனுக்கு ஏன் கடவுள் தேவை? பெரும்பாலான மனிதர்கள் கடவுளை நாடுவது மோட்சம் பெறவோ ஞானம் அடையவோ அல்ல. அவனுக்கு தேவை நிம்மதி, ஆறுதல் மற்றும் வாழ்க்கையில் வெற்றி. வாழ்கையில் நிம்மதி இல்லாத ஒருவனிடம் சென்று நீ தேவனிடம் நிம்மதி காண்பாய் என்று கூறினால் அவன் அதை முயற்சி செய்ய எண்ணுவான். அவனை மதம் மாற்றுவது எளிது. இப்படிபட்டவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி  உளவியல் ரீதியாக அவனை வசியம் செய்தனர். தங்கள் முயற்சியில் பெரும்  வெற்றியும் கண்டனர். ஆனால் இந்த முறையில் பிரச்சினை என்னவெனில் பெரும்பாலும் வயதானவர்களும் , ஆதரவற்ற பெண்களுமே இந்த முறையில் மதம் மாறினார். எனவே அவர்கள் காலத்திற்கு பின் மதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியவில்லை. மேலும் மதம் மாறிய பின்னரும் அவர்களை அதிகம் சிந்திக்க விடாமல் தொடர்ந்து  மூளை சலவை செய்ய வேண்டியது  அவசியம்.

 முறை 3:

இவர்களின் மற்றொரு முறை பொருளாதார ரீதியில்  உதவி செய்து மதம் மாற்றுவது. ஆனால் இப்படி மதம் மாறுபவர்களின் தேவ விசுவாசம் கேள்விகுறி. எனவே இந்த முறையும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மதம் மாறுபவர்கள் மீண்டும் மதத்தை கை விட வாய்ப்பு அதிகம்.

புதிய முறை:

 இப்படி எந்த முறையும்  இந்தியாவில் உதவவில்லை என்றதும் அவர்கள் ஒரு புதிய முறையை கையில் எடுத்துள்ளனர்.   இந்த முறையில்  அவர்கள் கிருஸ்துவத்திற்கு இந்திய முலாம் பூச முயற்சி செய்கின்றனர். காவி உடை அணிந்து மத மாற்றம் செய்வது, காவடி எடுத்து சர்ச்சுக்கு போவது, திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என பிரசாரம் செய்வது என்பது அனைத்தும் இந்த முறையே. இதன் மூலம் கிறிஸ்தவத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இந்த முறையில் ஆபத்து என்னவெனில் இந்து மதம் எதையும் தம்முள் கரைத்து கொள்ள கூடியது. காலப் போக்கில் இந்து புராணங்களில் ஏசுநாதர் சேர்க்கப் பட்டு கோவில்களில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட கூடிய அபாயம் உண்டு. மெழுகுவர்த்திக்கு பதில் தீபம் ஏற்றி அவரை வழிபடபோகும் காலம் வரலாம்.

மதமாற்றம்  தேசிய அபாயமா ?

 பல மொழி, இன, கலாசார நம்பிக்கைகள் கொண்ட இந்த நாட்டில் மக்களை ஒருங்கிணைப்பது மதம் மட்டுமே. இந்துக்களின் எண்ணிக்கை குறைவது நிச்சயம் தேசத்திற்கு ஆபத்தே. மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே பெரும்பாலான மத மாற்ற முயற்சிகள் வெற்றி பெற காரணம். இந்த மத மாற்ற முயற்சிகள் எந்த காலத்திலும் முழு  வெற்றி அடைய கூடாது என  எல்லாம் வல்ல கர்த்தரை  வேண்டி கொள்கிறேன்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பு இல்லை. மத மாற்றம் செய்யும் நோக்கில் சிலர் என்னை அணுகியுள்ளனர் . அவர்கள் கூறிய கருத்துகளே இந்த பதிவுக்கு காரணம். 


2 comments:

  1. // தன் மதத்தின் மேல் உண்மையான நம்பிக்கை கொண்ட எவனும் தன் மதத்தை விட்டு கொடுக்க மாட்டான். தனது மதம் அழிந்து போகுமோ என்ற பயத்தில் அதை மற்றவர் மீது திணிக்கவும் மாட்டான். //

    I LIKE THIS
    I HOPE THIS

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. இதை அனைவரும் உணர்ந்தால் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...