Saturday, March 23, 2013

திருட்டு டிவிடிய ஆதரிங்க

"அந்த காலத்துல நாங்க அரை அணா கொடுத்து படம் பாப்போம். வீட்டுக்கு வரப்போ எங்க பாட்டி வீட்டுக்குள்ள விடாம வாசல்ல நிறுத்திடுவாங்க. இப்போ  நீங்க கொஞ்சம் கூட யோசிக்காம  பதினஞ்சு ரூபாய் கொடுத்து படம் பாக்குறீங்க". இப்பிடி என் தாத்தா சொன்னது பதினெட்டு வருஷம் முன்னாடி. நல்ல வேளை இப்போ நடக்கிறது எல்லாம் பாக்காம போய் சேந்துட்டார். இப்போ 100 ரூபாய், 150 ருபாய் கொடுத்தெல்லாம் படம் பாக்குறது தெரிஞ்சா என்ன சொல்லுவாருன்னு நெனச்சே பாக்க முடியல.

வருசா வருசம் விலைவாசி கூடுது அப்பிடின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா சினிமா  தியேட்டர் டிக்கெட் மாதிரி வேற எந்த பொருளும் விலை கூடுன மாதிரி தெரியல. 2003 ல "தூள்" படம் 25 ரூபாய் கொடுத்து பாத்தேன். ஆனா இன்னைக்கு அந்த தியேட்டர்ல படம் பாக்கணும்னா 100 ரூபாய் வேணும்.  அதாவது 10 வருசத்துக்குள்ள 75 ரூபாய் கூடி இருக்கு. இதுல சின்ன ஒரு பெரிய ஊருன்னு எந்த வித்தியாசமும் இல்ல. 



லேட்டஸ்ட்டா ஒரு படம் வந்திச்சே வத்திக்குச்சினு. அந்த படம் பாக்கலாம்னு போனேன். மெட்ராஸ் அடுத்து இருக்குற ஒரு சின்ன ஊருதான். சின்ன தியேட்டர்தான். முகம் தெரியாத ஒரு ஹீரோ, புதுசா வந்த டைரக்டர். ஆனா அவன் சொன்ன டிக்கெட் விலை 100 ரூபா.  தியேட்டர்ல மொத்தமா 10 பேரு கூட இல்ல. பைரசி பிரச்னை. அதான் சீக்கிரமா காசு எடுக்க பாக்கறோம்னு அவங்க சொல்றாங்க. ஆனா 50 ரூபாய் டிக்கெட் வச்சா கூட்டம் நிச்சயாம ஜாஸ்தி ஆகும். மௌத்-டாக்ல படத்துக்கு விளம்பரமும் ஆகுமே. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா  தியேட்டர்க்கு வரவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்ளோ காசு பிடுங்கணும்னு ஆசைல மத்ததெல்லாம் மறஞ்சுடுது. டிவி வந்ததால சில தியேட்டர் மூடுனது உண்மை. ஆனா மிச்ச முள்ள தியேட்டர்ங்க மூடபட்டா அதுக்கு தியேட்டர்காரங்கதான் காரணமா இருப்பாங்க 

ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்ல டிக்கெட் ஜாஸ்தி சொன்னா சரிதான் . சின்ன சின்ன  தியேட்டர்ல கூட இப்பிடி காசு பிடுங்குறதுதான் பொறுக்க முடியல. இருந்தாலும் சினிமா பாக்காம எப்படி ஒரு  தமிழனால இருக்க முடியும்.அதுனால கேட்ட காசை குடுத்து உள்ளேயும் போயிடுறோம். அப்படி உள்ள போனதுக்கப்புறம் நடக்கிறது கொடுமை. படம் ஆரம்பிச்ச உடனே பின்னாடி இருன்னு ஒருத்தன் "சார்! படம் மறைக்கிது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்காருங்க" னு  சொல்லுவான். வேற வழி. அப்பிடியே கீழ சரிஞ்சு உக்கார வேண்டியதுதான். நிச்சயம் வீட்டுக்கு முதுகு வலியோட போகலாம்.

இப்போ ஏதோ புது டெக்னாலஜில படம் போடுவான் போல. கரண்ட் 2 மணி நேரம் மட்டும் இருக்குற ஊருல எதுக்கு டெக்னாலஜினு தெரியல. கரண்ட் கட் ஆனா சவுண்ட் கட் ஆயிடுது. ஆனா படம் மட்டும் ஓடிகிட்டே இருக்கு. ஆப்ரேடர் நாம போடற சத்ததுல  முழிச்சுகிட்டா ஓகே. இல்ல ஜெனரேடர் ஆன் பண்ற வரைக்கும் ஊமை படம்தான்.

அப்புறம் இன்டர்வல்ல சாப்பிடுற பண்டங்களுக்கு  அவன் வைக்கிறதுதான் விலை. பசில என்ன பண்றதுன்னு சொன்ன காசை குடுத்து அதயும் வாங்கிப்போம். இப்பிடி எல்லா கஷ்டத்தையும் மீறி படம் பாக்குறோம். அந்த படம் நல்லா இருந்தா இந்த கஷ்டம் எல்லாம் மறைஞ்சிடும். ஆனா வர படத்துல பாதி நம்ம கஷ்டத்தை ஜாஸ்தியாத்தான் ஆக்குது.

ஆகவே மக்களே நான் என்ன சொல்ல வரேன்னா இனிமே நாம திருட்டு DVD லயே படம் பாப்போம். திருட்டு DVD பாக்குறதுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் வேண்டாம். அவங்க பணம் சம்பாதிக்க பாக்கும்போது நாம நம்ம பணத்தை மிச்சம் பிடிக்கிறதுல  என்ன தப்பு. தியேட்டர் போகாட்டி சினிமா அழிஞ்சிடுமேனு கேக்குறீங்களா? அதுக்காக கவலை பட வேணாம். சினிமாலாம் DTH ல வரும். அப்புறம் சன் டிவிலயே ரிலீஸ் ஆகும். என்ன சினிமான்னு பேரு மட்டும் சீரியல்னு மாறிடும். அதுனால நமக்கு ஒன்னும் நஷ்டம் இல்ல. 

கருத்து சொல்லிட்டு போங்க 

1 comment:

  1. செம மேட்டருங்க நான் உங்கள் கருத்துடன் ஒத்தது போகிறேன் நான் தொடர்ந்து இனி எல்லா படங்களையும் திருட்டு டிவிடி யிலேயே பார்ப்பேன் என் உறுதியளிக்கிறேன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...